பலருக்கும் தெரியாத மைசூர் ரசம்

பலருக்கும் தெரியாத மைசூர் ரசம்.

செய்முறை புளி – நெல்லிக்காய் அளவு தக்காளி – 2 நெய் – ஒரு தேக்கரண்டி எண்ணெய் – தேவைக்கு உப்பு – தேவைக்கு துவரம் பருப்பு – கைப்பிடி வறுத்து அரைக்க : கொத்தமல்லி விதை – ஒரு மேசைக்கரண்டி மிளகு – ஒரு மேசைக்கரண்டி வரமிளகாய் – 3 கடலைபருப்பு – ஒரு மேசைக்கரண்டி பெருங்காயம் – 2 கிள்ளு கறிவேப்பிலை – 2 இதழ் தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி தாளித்து ஊற்ற: கடுகு – சிறிது சீரகம் – ஒரு மேசைக்கரண்டி பூண்டு – 5 பல் ( நசுக்கியது ) உளுத்தம்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி கறிவேப்பிலை – 2 இதழ் புளியை ஊற வைக்கவும். தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கவும். துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை வறுத்து ஆறிய பின் அரைத்துக் கொள்ளவும். பின் அதே பாத்திரத்தில் 2 கப் நீர் ஊற்றி பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு சிறிது உப்பு போட்டு கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் வேக வைத்த பருப்பை போடவும். புளிக்கரைசலை ஊற்றி 5 நிமிடம் கழித்து பின் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்க்கவும். தேவையான உப்பை போட்டுக் கொள்ளவும். இடையில் இன்னொரு சிறிய கடாயில் எண்ணெய் சிறிது ஊற்றி தாளித்து ஊற்ற வேண்டிய பொருட்களை தாளித்து ரசத்தில் கொட்டவும். மணமான, மிகவும் சுவையான மைசூர் ரசம் தயார். மல்லித் தழையை தூவவும். வேண்டுமெனில் ஒரு தேக்கரண்டி ரசப் பொடியையும் சேர்க்கலாம். இன்னும் மணம் தூக்கலாக இருக்கும்.